கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முருகனின் அறுபடை வீட்டுக்கும் தனித்தனி கந்தசஷ்டி கவசம் உள்ளது. ஐந்தாம் படைவீடான திருத்தணி கவசத்தை படியங்கள். காப்புதுதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்சஷ்டி கவசம் தனை.அமர ரிடர்தீர அமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறி.கணபதி துணைவா கங்காதரன் புதல்வாகுணவதி உமையாள் குமரா குருபராவள்ளிதெய் வானை மருவிய நாயகாதுள்ளிமயி லேறும் சுப்பிர மணியாஅழகொளிப் பிரபை அருள்வடி வேலாபழநி நகரில் பதியநு கூலாதிருவா வினன்குடி சிறக்கும் முருகாஅருள்சேர் சிவகிரி ஆறு முகவாசண்முக நதியும் சராபன்றி மலையும்பன்முகம் நிறைந்த பழநிக்கு இறைவாஆறாறு நூற்று அட்டமங் களமும்வீரவை யாபுரி விளங்கும் தயாபராஈராறு பழநி எங்கும் தழைக்கப்பாராறு சண்முகம் பகரும் முதல்வாஆறு சிரமும் ஆறுமுகமும்ஆறிரு புயமும் ஆறிரு காதும்வடிவம் சிறந்த மகரகுண் டலமும்தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்தூரமும்திருவெண் ணீறணி திருநுதல் அழகும்கருணை பொழியும் கண்ணான்கு மூன்றும்குனித்த புருவமும் கூரிய மூக்கும்கனித்த மதுரித்த கனிவாய் இதழும்வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையும்எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையும்காரிகை உமையாள் களித்தே இனிதெனச்சீர்தரும் வள்ளி தெய்வநா யகியாள்பார்த்தழ கென்னப் பரிந்த கபாலமும்வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும்முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்கமறுக்கும் சூரர்மேல் வாதுகள் ஆடஈச்வரன் பார்வதி எடுத்துமுத் தாடிஈச்வரன் வடிவை மிகக்கண் டனுதினம்கையால் எடுத்துக் கனமார்(பு) அணைத்தேஐயா! குமரா! அப்பனே! என்றுமார்பினும் தோளினும் மடியினும் வைத்துக்கார்த்திகே யாஎனக் கருணையால் கொஞ்சிமுன்னே கொட்டி முருகா! வருகவென்(று)அந்நேரம் வட்டமிட் டாடி விளையாடித்தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக்கூவிய மயிலேறும் குருபரா வருகதாவிய தகரேறும் சண்முகா வருகஏவியவே லேந்தும் இறைவா வருககூவிய சேவற் கொடியோய் வருகபாவலர்க் கருள்சிவ பாலனே வருகஅன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருகபொன்போல் சரவணப் புண்ணியா வருகஅழகிற் சிவனொளி அய்யனே வருககளபம் அணியுமென் கந்தனே வருகமருமலர்க் கடம்பணி மார்பா வருகமருவுவோர் மலரணி மணியே வருகதிரிபுர பவனெனும் தேவே வருகபரிபுர பவனெனும் பவனே வருகசிவகிரி வாழ்தெய்வ சிகாமணி வருககாலில் தண்டை கலீர் கலீரெனசேலிற் சதங்கை சிலம்பு கலீரெனஇடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும்அடும்பல வினைகளை அகற்றிய பாதமும்சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும்நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும்தங்கரை ஞாணும் சாதிரை மாமணிபொங்குமாந் தளிர்சேர் பொற்பீதாம் பரமும்சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும்மந்திர வாளும் வங்கிச் சரிகையும்அருணோ தயம்போல் அவிர்வன் கச்சையும்ஒருகோடி சூரியன் உதித்த பிரபைபோல்கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும்இருகோடி சந்திரன் எழிலொட்டி யாணமும்ஆயிரம் பணாமணி அணியுமா பரணமும்வாயிலநன் மொழியாய் வழங்கிய சொல்லும்நாபிக் கமலமும் நவரோக பந்தியும்மார்பில் சவ்வாது வாடை குபீரெனபுனுகு பரிமளம் பொருந்திய புயமும்ஒழுகிய சந்தனம் உயர் கஸ்தூரியும்வலம்புரி சங்கொலி மணியணி மிடறும்நலம்சேர் உருத்திர அக்க மாலையும்மாணிக்கம் முத்து மரகதம் நீலம்அணிவை டூரியம் அணிவைரம் பச்சைபவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியும்நவமணிப் பிரபைபோல் நாற்கோடி சூரியன்அருணோ தயமெனச் சிவந்த மேனியும்கருணை பொழியும் கடாட்சவீட் சணமும்கவசம் தரித்தருள் காரண வடிவும்நவவீரர் தம்முடன் நற்காட்சி யானஒருகை வேலாயுதம் ஒருகை சூலாயுதம்ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயுதம்ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம்புஒருகை மந்திரவாள் ஒருகை மாமழுஒருகை மேற்குடை ஒருகை தண்டாயுதம்ஒருகை சந்திராயுதம் ஒருகை வல்லாயுதம்அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப்பங்கயக் கமலப் பன்னிரு தோளும்முருக்கம் சிறக்கும் முருகா சரவணைஇருக்கும் குருபரா ஏழைபங் காளாவானவர் முனிவர் மகிழ்ந்து கொண் டாடத்தானவர் அடியவர் சகலரும் பணியப்பத்திர காளி பரிவது செய்யச்சக்திகள் எல்லாம் தாண்டவ மாடஅஷ்ட பயிரவர் ஆனந்த மாடதுஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்கசப்த ரிஷிகள் சாந்தக மென்னச்சித்தர்கள் நின்று சிவசிவா என்னத்தும்புரு நாரதர் சூரிய சந்திரர்கும்பமா முனியும் குளிர்ந்ததா ரகையும்அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள்நயமுடன் நின்று நாவால் துதிக்கஅஷ்ட லக்ஷ்மி அம்பிகை பார்வதிகட்டழகன் என்று கண்டுனை வாழ்த்தஇடும்பா யுதன்நின் இணையடி பணியஆடும் தேவகன்னி ஆலத்தி எடுக்கதேவ கணங்கள் ஜெயஜெய என்னஏவற் கணங்கள் இந்திரர் போற்றகந்தருவர் பாடிக் கவரிகள் வீசிச்சார்ந்தனம் என்னச் சார்வரும் அநேகபூதம் அடிபணிந் தேத்தவே தாளம்பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாடஅரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்ககுருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்ககுடையும் சேவலின் கொடியும் சூழஇடை விடாமல்உன் ஏவலர் போற்றச்சிவனடி யார்கள் திருப்பாத மேத்தநவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம்உருத்திர வீணை நாதசுர மேளம்தித்திமி என்று தேவர்கள் ஆடச்சங்கீத மேளம் தாளம் துலங்கமங்கள மாக வைபவம் இலங்கதேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம்சேவல் கொடியும் சிறப்புடன் இலங்கநந்திகே சுவரன்மீது ஏறிய நயமும்வந்தனம் செய்ய வானவர் முனிவர்எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வரஐங்கரன் முன்வர ஆறுமா முகவன்வீரமயி லேறி வெற்றிவேல் எடுத்துச்சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச்சிங்கமுகா சுரன் சிரமது உருளத்துங்கக் கயமுகன் சூரனும் மாளஅடலற்ற சூலத்தை அறுத்துச் சயித்துவிடவே லாயுதம் வீசிக்கொக் கரித்துத்தம்ப மெனும் சயத் தம்பம் நாட்டிஅன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத்திருப்பரங் குன்றம் சீர்ப்பதி செந்தூர்திருவாவி னன்குடி திருவே ரகமும்துய்ய பழநி சுப்பிர மணியன்மெய்யாய் விளங்கும் விராலி மலைமுதல்அண்ணா மலையும் அருள்மேவும் கயிலைகண்ணிய மாவூற்று கழுகுமா மலையும்முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும்நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும்கதிர்காமம் செங்கோடு கதிர்வேங் கடமும்பதினா லுலகத்திலும் பக்தர் மனத்திலும்எங்கும் தானவ னாயிருந்(து) அடியார்தம்பங்கி லிருந்து பாங்குடன் வாழ்ககேட்ட வரமும் கிருபைப் படியேதேட்ட முடன் அருள் சிவகிரி முருகாநாட்டு சிவயோகம் நாடிய பொருளும்தாட்டிக மாய்எனக்(கு) அருள்சண் முகனேசரணம் சரணம் சரவண பவஓம்சரணம் சரணம் சண்முகா சரணம்!