* நெற்றிக்கு அழகு சேர்க்கும் திருநீற்றைப் பூசுவதால் அழகும், அறிவும் உண்டாகும். * முடிந்தால் பிறருக்கு கொடுங்கள். முடியாவிட்டால் பிறர் கொடுப்பதை தடுக்காதீர்கள். * மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்க கூடாது. விளையாட்டாகக் கூட பொய் பேசக் கூடாது. * கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இல்லாமல் இருப்பதே பக்தி. * அதர்மம் அதிகரிக்கும் போது கடவுளின் அவதாரம் மண்ணில் நிச்சயம் நிகழும். * தைரியத்தை இழக்கக் கூடாது. உலகில் எதையும் சாதிக்கும் வலிமை இதற்கு மட்டுமே உண்டு. * உலக விஷயங்களில் விருப்பம் இருக்கும் வரை மனிதனுக்கு பிறவிச்சங்கிலி தொடர்ந்திடும். * நல்லவர்களுக்கு உதவுங்கள். ஒருபோதும் அவர்களின் மனம் நோகச் செய்யாதீர்கள். * கோபத்தை அறவே கைவிட்டவர் வாழ்வில் துன்பத்திற்கு இடமிருக்காது. * தர்மத்தைக் காப்பதற்காக பொய் சொல்லலாம். சுயநலத்தால் பொய் பேசுவது பாவம். * ஆபத்து நேரத்தில் கைகொடுத்தும், தக்க சமயத்தில் இடித்துரைப்பதும் நண்பனின் கடமை. * உண்மையும், பொறுமையும் உயர்வுக்கு வழிவகுக்கும். தீய நடத்தை தாழ்நிலைக்கு ஆளாக்கும் * நேர்மை தவறாதவர்கள் சொல்லும் வார்த்தைகள் அப்படியே பலிக்கும். * திருப்தியைக் காட்டிலும் சிறந்த செல்வம் இல்லை. மனைவியைக் காட்டிலும் உற்ற நண்பன் இல்லை. * காலையில் கிழக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியும் நீராடுவது நன்மை தரும். * மவுன விரதத்திற்கு நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டாம். எந்த நாளிலும் மேற்கொள்ளலாம். * மந்திரங்களைச் சரியாக தெரிந்து கொண்டு பிழையில்லாமல் உச்சரிப்பது அவசியம்.