* வாழ்க வளமுடன் என ஒருவரை ஒருவர் வாழ்த்தினால் பலவீனம் நீங்கி வளர்ச்சிக்கான கதவு திறக்கும். * பேச்சிலும் நடத்தையிலும் பண்பற்ற வார்த்தைகளையோ, தேவையற்ற மிடுக்கையோ காட்ட வேண்டாம். * பிரச்னை வரும் போது பிறர் முதலில் இறங்கி வரட்டும் என எண்ணாமல் நீங்களே பேச்சை துவக்குங்கள். * பிறருக்கு தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களிடம் எல்லா விஷயங்களையும் சொல்லாதீர்கள். * புன்முறுவல் காட்டவும் அன்பாக பேசவும் கூட நேரம் இல்லாதது போல் நடக்காதீர்கள். * நீங்கள் கேள்விப்படும் எல்லா விஷயங்களையும் ஏற்காதீர்கள். ஆலோசித்த பிறகு முடிவு செய்யுங்கள். * அடிக்கடி நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். * வாழக்கையில் உங்களுக்கு ஏற்படும் அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள். * மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்வாக நினைத்து கர்வப்படாதீர்கள். * மற்றவர் எண்ணம், பேச்சு, செயல்களை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். * உண்மை எது, பொய் எது என விசாரிக்காமல் வதந்திகளை பரப்பாதீர்கள். * நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று பிறரிடம் வாதம் செய்யாதீர்கள். * நீங்கள் முடியவே முடியாது என நினைத்ததை ஒருவன் செய்வான் அல்லது செய்து கொண்டிருப்பான். * உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். * அளவுக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள். திருப்தி என்பது எல்லாவற்றிலும் மிக முக்கியம். * அர்த்தம் இல்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். * சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள். * ‘நானே பெரியவன் நானே சிறந்தவன்’ என்ற அகந்தையை விடுங்கள். வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான்.