ஆடம்பரத்தை நாடுவது நல்லதல்ல. இதனால் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். * தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்களுக்கு அடிமைப்பட்டவன் நாசமாகி விடுவான். * ஆடம்பர வாழ்வு வாழ்வதில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பகட்டான வாழ்வு வாழ்பவன் இறைவனின் அடியாராக ஏற்கப்பட மாட்டார். * வருமானத்திற்கு தக்கபடி செலவு செய்பவனும், எல்லா செயல்களிலும் நடுநிலையை பின்பற்றுபவனும் நிச்சயம் ஏழ்மை அடைய மாட்டான். ஆனால் பெண்கள் விஷயத்தில் மட்டும் சலுகை அளிக்கப்படுகிறது. அவர்கள் தங்கம், பட்டாடைகளை அணியத் தடையில்லை