பதிவு செய்த நாள்
06
ஏப்
2021
03:04
வேலூர்: வேலூரில், பிராமணர் சங்கம் சார்பில், பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. வேலூர், கிளை பிராமணர் சங்கம் சார்பில், பிலவ வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா, மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில், வேலூரில் நேற்று நடந்தது. மகளிரணி செயலாளர் லலிதா வரவேற்றார். பிலவ வருட பஞ்சாங்கத்தை சத்தியமூர்த்தி வெளியிட்டார். தொடர்ந்து நடந்த செயற்குழு கூட்டத்தில், பிராமணர் சங்க உறுப்பினர்கள், கட்டாயம் தேர்தலில் ஓட்டு போட வேண்டும், பிராமண குழந்தைகளுக்கு, கோடை கால ஸ்லோக வகுப்புகள் நடத்துவது, அரசு பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பெண் வாங்கும் மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்குவது, என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஆலோசகர்கள் பாலசுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், செய்தி தொடர்பாளர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.