பதிவு செய்த நாள்
06
ஏப்
2021
11:04
ஊட்டி: நுாற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்டீபன் சர்ச்சில், 190 வது ஆண்டு விழா நடந்தது.
ஊட்டியில் ஆங்கிலேயர் ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்ட, 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த ,பிரசித்தி பெற்ற ஸ்டீபன் சர்ச் உள்ளது. 1831 ம் ஆண்டு கட்டப்பட்டு, ஈஸ்டர் ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த ஆலயத்தில், கலைநயத்துடன் கூடிய கட்டடக்கலை, கதவுகள், ஜன்னல்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. ஐம்பொன்களால் ஆன சிலுவை, பெல் மற்றும் பிரமாண்ட தூண்களும், பழமை வாய்ந்த கடிகாரமும், தேக்கினால் உருவாக்கப்பட்ட இருக்கைகள் என, மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டும் உள்ளது. 190வது ஆண்டை முன்னிட்டு, ஏப்., 4 ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை, கலைநிகழ்ச்சிகள், பாட்டு போட்டி போன்றவை நடந்தது. சிறப்பு பிரார்த்தனையை கோவை பேராயர் ரெவரண்ட் தீமோத்தி ரவீந்திரன் நடத்தி வைத்தார். கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.