திருத்தங்கல் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் முளைப்பாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2021 10:04
சிவகாசி: திருத்தங்கல் ஹிந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு, முளைப்பாரி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோயில் விழா மார்.,27 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், இரவு 7:00 மணிக்கு அம்மன் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். 10ம் நாள் விழாவாக நேற்ற முளைப்பாரி நடைபெற்றது. ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் நகர் வலம் வந்தார்.