வால்பாறை: வால்பாறை கக்கன் காலனி மதுரை வீரன் திருக்கோவிலின், 67ம் ஆண்டு திருவிழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று காலை, 11:00 மணிக்கு, மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் ஆகியோருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.தொடர்ந்து, பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.