நிலக்கோட்டை: மல்லியம்பட்டியில் பட்டாளம்மன், முத்தாலம்மன் கோயில் பங்குனித் திருவிழா நடந்தது. வைகை ஆற்றிலிருந்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டது. சாமி ஊர்வலம் முடிந்து பொங்கல் படைத்து வழிபட்டனர். தீச்சட்டி எடுத்து, அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர். ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர் செய்து இருந்தனர்.