பதிவு செய்த நாள்
10
ஏப்
2021
06:04
கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. 5:00 மணிக்கு பாடலீஸ்வரர், நந்திகேஸ்வரருக்கு தீபாராதனை நடந்தது. 6:00 மணிக்கு பிரதோஷ நாயகர் 3 முறை கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்றுநெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவில், கைலாசநாதர், நடனபாதேஸ்வரர் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவில், மலையாண்டவர் கோவில், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வர் கோவில்களில் நேற்று மாலை 5:00 மணிக்கு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.பெண்ணாடம்பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 9:30 மணியளவில் உலக மக்கள் நலன்வேண்டி, மூலவர் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், 5:30 மணியளவில் மகா தீபாராதனையும் நடந்தது.
பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.