உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீபிரத்தியங்கராதேவி கோவிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீபிரத்தியங்கராதேவி கோவிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 11 மணியளவில் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் பல்வேறு பழங்கள் யாககுண்டத்தில் கொட்டப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி எழுதிய வெற்றிலையையும், புடவைகளையும் யாக குண்டத்தில் கொட்டினர். பின்னர் தீபாராதனை வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பிரத்தியங்கரா தேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.