திருவதிகை சரநாராயண பெருமாள் கோதண்டராமராக அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2021 02:04
பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் அமாவாசையொட்டி, மூலவர் கோதண்டராமர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி, நேற்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, மூலவர் சரநாராயண பெருமாள் சீதா லட்சுமண அனுமன் சமேத கோதண்டராமர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9:00 மணிக்கு சுவாமி உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8:30 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.