நடுவீரப்பட்டு பிரத்யங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2021 02:04
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவிக்கு அமாவாசையையொட்டி, நிகும்பலாயாகம் நடந்தது.
நடுவீரப்பட்டு, நரியன் ஓடை கரையில் உள்ள பாதாளகாளி மற்றும் பிரத்தியங்காரதேவி கோவிலில் நேற்று பங்குனி மாத அமாவாசையையொட்டி, நிகும்பலாயாகம் நடந்தது. நேற்று மதியம் 1:30 மணிக்கு பிரத்யங்கராதேவி மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு, யாகவேள்விகள் நடந்தது.மதியம் 2:30 மணிக்கு மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது. தொடர்ந்து யாகவேள்வியில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து பிரத்யங்கராதேவிக்கு கலச அபிேஷகம் நடந்தது. மதியம் 3:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு அபிேஷகம், 3:15 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.