பதிவு செய்த நாள்
15
ஏப்
2021
09:04
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று(ஏப்.,15) முதல் 10 கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
1. ஏப்.,15 - 30 வரை காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 4:00 மணி - இரவு 9:00 மணி வரை பூஜை காலங்கள், திருவிழா புறப்பாடு காலங்கள் நீங்கலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
2. பொது தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக மட்டும் அனுமதிக்கப்படுவர். ரூ.100, ரூ.50 சிறப்பு தரிசன கட்டண சீட்டு பெறும் பக்தர்கள் தெற்கு கோபுர வாசல் வழியாக மட்டும் அனுமதிக்கப்படுவர். மற்ற கோபுர வாசல்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
3. பக்தர்கள் கிழக்கு வாசல், அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், இருட்டு மண்டபம், பொற்றாமரைக்குளம் கிழக்கு பகுதி, தெற்குப்பகுதி, கிளிக்கூடு மண்டபம், கொடிமரம் வழியாக அம்மன் சன்னதிக்கு செல்ல வேண்டும். கட்டண சீட்டுள்ள பக்தர்கள் தெற்கு கோபுரம், கிளிக்கூடு மண்டபம், கொடிமரம் வழியாக செல்ல வேண்டும்.
4. அம்மன் தரிசனம் முடிந்து சுவாமி சன்னதி சென்று தரிசனம் செய்து சனீஸ்வரர் சன்னதி, அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், பத்ரகாளி அருகில் உள்ள வழியே வெளியேறி பழைய திருக்கல்யாண மண்டபம், அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக வெளியேற வேண்டும்.
5. கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.
6. உடல்வெப்ப நிலை பரிசோதனை, கிருமிநாசினியால் கைகளை சுத்தப்படுத்திய பின் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
7. 10 வயதிற்குட்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்டோர், நோய்வாய்ப்பட்டோர் கோயிலுக்கு வர அனுமதியில்லை.
8. அலைபேசி கொண்டு வரக்கூடாது.
9. தேங்காய், பழம் கொண்டு வர அனுமதியில்லை. அர்ச்சனையும் செய்யப்படாது.
10. கோயிலுக்குள் எங்கேயும் உட்கார அனுமதியில்லை.