திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2021 05:04
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சண்முகப் பெருமான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் சண்முகப் பெருமான் ஆலயத்தில் கிருத்திகையை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகப் பெருமானுக்கு மகா அபிஷேகம், வெள்ளி காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை, சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதில் பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.