நேத்ரானேஸ்வரர் கோவிலில் சூரிய வழிபாடு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2021 06:04
விக்கிரவாண்டி; பனையபுரம் நேத்ரானேஸ்வரர் கோவிலில் சூரிய வழிபாடு சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் உள்ள சத்தியாம்பிகை உடனுறை நேத்ரானேஸ்வரர் கோவில் உள்ளது.பழமை வாய்ந்த இக்கோவிலில், பார்வை இழந்த சூரியன் நேத்ரானேஸ்வரரை வழிபட்டு மீண்டும் பார்வை ஏற்பட்டதாக ஐதீகம் உண்டு.ஆண்டு தோறும் சித்திரை 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சுவாமி மீது சூரிய ஒளி பட்டு சூரியன் வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கண் சம்பந்தப்பட்ட நோய் உடையவர்கள் இந்த கோவிலில் வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.நேற்று தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு வினாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சத்தியாம்பிகை, நேத்ரானேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதனைத் தொடர்ந்து காலை 6.22 மணிக்கு கருவறையில் உள்ள நேத்ரானேஸ்வரர் மற்றும் சத்தியாம்பிகை மீது சூரிய ஒளி பட்டு சூரிய வழிபாடு நடந்தது. சூரியன் வழிபட்ட பிறகு சிறப்பு மகா தீப ஆராதனை நடந்தது.சிறப்பு பூஜைகளை கணேசன் குருக்கள், அருண் குருக்கள் ஆகியோர் செய்தனர்.