பழநி: தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பழநிக்கு வந்தார். ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றவர் சாயரட்சை பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.கிருத்திகை துவங்கிய நேரத்தில் முதல்வர் பழனிசாமி பெயரில் அவர் மீண்டும் முதல்வராக தங்கரதம் இழுத்தார். முன்னதாக அறங்காவலர் குழு தலைவர் அப்புக்குட்டி உட்பட அதிகாரிகள் வரவேற்றனர்.