Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை மற்றும் அரசியல்வாதிகளுக்கு ... திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் அமைச்சர் திடீர் ஆய்வு! திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலுக்கு மேலும் இரண்டு பஸ்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2012
10:06

திருத்தணி: திருத்தணி மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, மேலும் இரண்டு புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடிக் கிருத்திகை, திருப்படித் திருவிழா, பிரம்மோற்சவம் மற்றும் தமிழ், ஆங்கில புத்தாண்டு ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகுகள் குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர். மாதம்தோறும் வரும் கிருத்திகை மற்றும் ஆடிப்பூரம் ஆகிய நாட்களிலும், ஒரு லட்சம் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு வந்து மூலவரை வழிபடுகின்றனர்.

பஸ்கள் இயக்கம்: பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம், தணிகை தேவஸ்தான விடுதியில் இருந்து மலைக் கோவிலுக்குச் செல்ல, இரண்டு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள், ரூ.10 டிக்கட் பெற்றுக் கொண்டு பஸ்கள் மூலம் சென்று வரலாம். முக்கிய திருவிழா, விடுமுறை நாட்கள், திருமண முகூர்த்த நாட்களில் அதிகளவில் பக்தர்கள் குவிவதால், இரண்டு பஸ்களிலும் இடம் கிடைக்காமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம், கூடுதலாக இரண்டு பஸ்களை வாங்கியுள்ளது.

இம்மாத இறுதியில்: இது குறித்து, கோவில் இணை ஆணையர் தனபால் கூறும் போது, மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இரண்டு தேவஸ்தான பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிதியில் இருந்து, 36 லட்ச ரூபாய்க்கு இரண்டு புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழித்தட அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி வந்தவுடன், இம்மாத இறுதிக்குள், புதிய பஸ்கள் இயக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 
temple news
விஜயநகரா: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன் முறையாக, ஹம்பிக்கு வந்தார். வரலாற்று பிரசித்தி ... மேலும்
 
temple news
டில்லி; இந்தியா வந்துள்ள மங்கோலியாவின் ஜனாதிபதி குரேல்சுக் உக்னா தனது குடும்பத்தினறுடன் டில்லி ... மேலும்
 
temple news
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் 2 கோடி ரூபாயில் தங்க தேர் அமைக்கும் பணி நடைபெற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வாயிலாக 53 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar