Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை மற்றும் அரசியல்வாதிகளுக்கு ... திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் அமைச்சர் திடீர் ஆய்வு! திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலுக்கு மேலும் இரண்டு பஸ்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2012
10:06

திருத்தணி: திருத்தணி மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, மேலும் இரண்டு புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடிக் கிருத்திகை, திருப்படித் திருவிழா, பிரம்மோற்சவம் மற்றும் தமிழ், ஆங்கில புத்தாண்டு ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகுகள் குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர். மாதம்தோறும் வரும் கிருத்திகை மற்றும் ஆடிப்பூரம் ஆகிய நாட்களிலும், ஒரு லட்சம் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு வந்து மூலவரை வழிபடுகின்றனர்.

பஸ்கள் இயக்கம்: பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம், தணிகை தேவஸ்தான விடுதியில் இருந்து மலைக் கோவிலுக்குச் செல்ல, இரண்டு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள், ரூ.10 டிக்கட் பெற்றுக் கொண்டு பஸ்கள் மூலம் சென்று வரலாம். முக்கிய திருவிழா, விடுமுறை நாட்கள், திருமண முகூர்த்த நாட்களில் அதிகளவில் பக்தர்கள் குவிவதால், இரண்டு பஸ்களிலும் இடம் கிடைக்காமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம், கூடுதலாக இரண்டு பஸ்களை வாங்கியுள்ளது.

இம்மாத இறுதியில்: இது குறித்து, கோவில் இணை ஆணையர் தனபால் கூறும் போது, மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இரண்டு தேவஸ்தான பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிதியில் இருந்து, 36 லட்ச ரூபாய்க்கு இரண்டு புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழித்தட அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி வந்தவுடன், இம்மாத இறுதிக்குள், புதிய பஸ்கள் இயக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar