பதிவு செய்த நாள்
12
ஜூன்
2012
10:06
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை ருக்மணி ஸமேத பாண்டுரெங்கநாத ஸ்வாமி கோவிலில், மண்டல பூஜையையொட்டி நாள்தோறும் ஹோமம், சிறப்பு அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சி நடந்து வருகிறது. சேலம், செவ்வாய்ப்பேட்டை, மாணிக்க வாசகம் தெருவில் பிரஸித்தி பெற்ற பாண்டுரெங்கநாத ஸ்வாமி கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து, மண்டல பூஜை நடந்து வருகிறது. ஜூலை 18ம் தேதி வரை நடக்கும் மண்டல பூஜையை முன்னிட்டு, ஸ்வாமிக்கு தினமும் சிறப்பு அலங்காரம், ஆராதனை நடக்கிறது. ஒவ்வொரு நாளும், பக்தி இன்னிசை கச்சேரி, வயலின், மிருதங்கம், பரத நாட்டியம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோவிலில் நடந்து வருகிறது. மண்டல பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர்.