சிங்கம்புணரி: சிங்கம்புணரி ராமர் கோவில் ஸ்ரீராம நவமி கொண்டாடப்பட்டது. ராமபிரான் அவதரித்த நாளான இன்று காலை 10:00 மணிக்கு மூலவரான அனுமன், லெட்சுமணர், சீதா சமேத ஸ்ரீராமருக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு துளசி, தாமரை மலர்களால் வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார். மாலை 6:00 மணிக்கு கோயில் பிரகாரத்திற்குள் சுவாமி வீதி உலா நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் பங்கேற்றனர்.