தஞ்சாவூர்:திருவையாறில், ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 251வது ஜெயந்தி விழா, நேற்று நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமி நினைவிடத்தில், 254வது ஜெயந்தி விழா, நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு, தியாகராஜர் சுவாமிகளின் சிலைக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு மகா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது.தியாகராஜர் சுவாமிகளின் கீர்த்தனைகளை பாடி, இசைக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.தியாகராஜர் சுவாமிகளின் வம்சாவழி பூஜகர் தியாகராஜ சர்மா குடும்பத்தினர், பூஜை ஏற்பாடுகளை செய்தனர்.