கடலாடி: கடலாடி அருகே ஆப்பனூரில் ராமர் கோயில் உள்ளது. ராம நவமி உற்ஸவத்தை முன்னிட்டு மூலவர்கள் ராமர், சீதாதேவி, லட்சுமணர், அனுமன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. முகக் கவசம் அணிந்த நிலையில் பக்தர்கள் அர்ச்சனை, ராம நாம ஸ்தோத்திரம், துதிப்பாடல்கள், சுந்தரகாண்டம் உள்ளிட்டவைகளை பாடினர். ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.