திருமங்கலம்: திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் ஏப். 24 ல் நடக்க உள்ளது. காலை 8.30 மணிமுதல் 9 மணிக்குள் திருமணம் நடக்க உள்ளது. கொரோனா தொற்று காரணமாக திருக்கல்யாணத்தின் போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது. திருக்கல்யாணம் முடிந்ததும் விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் குறைந்த அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என செயல் அலுவலர் சக்கரையம்மாள் தெரிவித்தார்.