* கடவுளைச் சரணடைந்தால் நம் பாவங்கள் தொலையும். * கடவுளுக்கு எதை அர்ப்பணித்தாலும் அது புனிதமடையும். * மற்றவர்களை அவமதிப்பது மிகக் கொடிய செயல். * பக்தி மார்க்கத்தை தவிர வேறு எதுவும் ஏற்கத்தக்கது அல்ல. * ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை தினமும் பாடுங்கள். * ஐம்புலன்களே நம் முதல் விரோதிகள் என்பதை மறவாதீர்கள். * கடவுளுக்கு அர்ப்பணிக்காத உணவு, உடை, பூக்கள், சந்தனம், வெற்றிலை, பாக்கை ஏற்கக் கூடாது. * எந்த பொருளாக இருந்தாலும் அதை மானசீகமாக கடவுளுக்கு சமர்ப்பியுங்கள். * ஒரு கடவுளை மட்டும் வழிபடுங்கள். பல தெய்வங்களை வழிபட்டால் அது அவரை அவமதிப்பதாகும். * நல்லவர்கள், அறிவாளிகள், தர்மசிந்தனை கொண்டவர்களை கண்டால் வணங்குங்கள். * வாழ்வில் குறுக்கிடும் இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக கருதுங்கள். * தொண்டு செய்வதன் மூலமே கடவுளை நம்மால் அடைய முடியும். * ஸ்ரீமந் நாராயணரே ‘பரம்பொருள்’ என்ற தெளிவுடன் பக்தி செலுத்துங்கள். * கோயில் கோபுரத்தைக் கண்டதும் நின்ற இடத்தில் இருந்தே கைகூப்புங்கள். * சுவாமி சிலைகளை கல், ஐம்பொன், சுதை, மரம் எனக் கருதாதீர். அது தாயின் ஒழுக்கத்தை சந்தேகிப்பது போன்றது. * குருநாதர், அடியவர்களைக் கண்டதும் வணங்குவது உயர்வுக்கு வழிவகுக்கும்.