ரமலான் சிந்தனைகள் 10: அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2021 05:04
ஒருசமயம் நாயகத்தைக் காண ஒருவர் காத்து நின்றார். இது பற்றி, அவரிடம் சொன்ன போது, “அவன் நல்லவனில்லை, இருந்தாலும் உள்ளே வரச் சொல்லுங்கள் என்றார். வந்தவரிடம் பரிவுடன் பேசினார். அவர் சென்ற பிறகு, நாயகத்தின் மனைவி ஆயிஷா, “அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி இவ்வளவு அன்பாக பேச முடிகிறது?” என்று ஆச்சர்யமுடன் கேட்டார்.
அதற்கு,“இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு ஜனங்கள் உறவாட இடந்தராத அளவில் கொடுமொழி பேசுபவன் தான்” என்றார் நாயகம். இதை போலவே இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. நாயகம் தோழர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது, அவரது செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் வந்தார். உடனே நாயகம் தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து, அவரை அமரச் செய்தார். பின் ஹலீமாவின் தாயார் வந்தார். அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்தார். இதையடுத்து ஹலீமாவின் சகோதரர் வரவே, எழுந்து நின்று, தன் இடத்தைக் கொடுத்தார். இதில் இருந்து அவரது கனிவான உபசரிப்பை நாம் உணர முடியும். நமக்கு வேண்டியவர், வேண்டாதவர் அனைவரிடமும் அன்பு காட்டி மகிழ்வோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:28 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:11 மணி.