Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சூர் பூரம் விழா: யனைகளின் ... மரகதவல்லிக்கு மணக்கோலம்: மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் மரகதவல்லிக்கு மணக்கோலம்: மதுரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை உத்தரவு பெட்டியில் குங்குமம்: நோய் நீங்கும்
எழுத்தின் அளவு:
சிவன்மலை உத்தரவு பெட்டியில் குங்குமம்: நோய் நீங்கும்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2021
08:04

காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், குங்குமம் வைத்து பூஜை செய்யப்படுவதால், சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும் என, பக்தர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. சிவன்மலை கோவிலில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரணமூர்த்தி என்ற பெயர் உள்ளது.

சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வருகிறது. கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், அதை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால், ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. இதுவரை இங்கு  மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இரும்பு சங்கிலி, ருத்ராட்சம் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த மார்ச், 25 முதல் அம்மை அப்பர் திருக்கல்யாண கைலாய காட்சியில், விநாயகர், முருகன் தெய்வ ஜாதகம் திருமாங்கல்யம் வைத்து பூஜையானது. இந்நிலையில் கோவை, துடியலுாரை சேர்ந்த பவானி, 40, என்பவரின் கனவில் குங்குமம் வைத்து பூஜை செய்ய உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் குங்குமம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இது குறித்து, கோவில் சிவாச்சாரியார் ஒருவர் கூறியதாவது:  சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. மங்களகரமான பொருள் என்பதால் நாட்டில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும். இதன் தாக்கம் போகபோகத்தான் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து பூஜை பொருள் வைத்த பவானி கூறியதாவது: மருதமலை முருகன் கோவிலுக்கு அடிக்கடி செல்வேன். இதுவரை சிவன்மலை முருகன் கோவிலுக்கு வந்தது இல்லை. நேற்று காலை, 3:00 மணியளவில் கனவில் முருகன் குழந்தை வடிவில் தோன்றி, ‘சிவன்மலை கோவில் உத்தரவு பெட்டியில் குங்குமம் வை, நான் சொல்கிறோன் கேள்’ என்று சொல்லிவிட்டு மறைந்தார். இதையடுத்து, நேற்று வந்து குங்குமம் தந்தேன், இங்கு வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar