Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news இரவு வரை அன்னதானம்: தயாராகும் பழநி ... பள்ளம் தோண்டிய போது ஐம்பொன் சிலை கண்டெடுப்பு! பள்ளம் தோண்டிய போது ஐம்பொன் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்: மதுரை ஆதீனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2012
10:06

மதுரை: நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார், என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மதுரை ஆதீனம் மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா பொறுப்பேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். ஆனாலும், "பதவி விலக போவதில்லை என நித்யானந்தாவும், "பதவி நீக்கம் செய்ய போவதில்லை என மதுரை ஆதீனமும் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், பெங்களூரூ பிடதி ஆசிரமத்தில், ஏற்பட்ட மோதல் தொடர்பாக நித்யானந்தா தலைமறைவானார். ஆசிரமத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக கர்நாடக முதல்வர் சதானந்தா கவுடா அறிவித்தார். இதைதொடர்ந்து, மதுரை ஆதீனம் மட்டும் மதுரை திரும்பி ஓய்வு எடுக்கிறார். அவர் நமது நிருபருக்கு மொபைல் போனில் அளித்த பேட்டி:

* இளைய ஆதீனம் நித்யானந்தா எங்கு இருக்கிறார்?
அவர் இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்.

* நித்யானந்தா குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுகிறதே?
இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை

* பிடதி ஆசிரமத்திற்கு "சீல் வைத்துள்ளது பற்றி?

யார் சொன்னது? "சீல் வைக்க போவதாகதான் கூறினார்கள். அங்கு வழக்கம்போல் ஆன்மிக பணிகள் நடக்கின்றன. இவ்வாறு கூறிய ஆதீனத்திடம், தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றபோது, ""நான் "மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பார்க்கலாம். ஆசீர்வாதம் என்று போனை "கட் செய்தார். நித்யானந்தா இருப்பிடம் குறித்து, மடத்தில் உள்ளவர்களிடம் கேட்டபோது, "அவர் பிடதி ஆசிரமத்தில்தான் உள்ளார் என்றனர். இதற்கிடையே, மதுரை ஆதீன மடம் மூடப்பட்டதாக தகவல் வெளியானது. இதை மறுத்த ஆதீன மட பொறுப்பாளர்கள், ""வழக்கம் போல் அன்னதானம் நடக்கிறது. யாராவது பிரச்னை செய்வதற்காகவே வருவதால், முன்னெச்சரிக்கையாக பிரதான கேட் மட்டும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய வருபவர்கள், விசாரணைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர், என்றனர். மடத்தில் நித்யானந்தா இருந்தபோது, 50க்கும் மேற்பட்ட ஆண், பெண் சீடர்கள் மடத்தில் தங்கி சேவை செய்தனர். தற்போது 4 வெளிநாட்டு பக்தர்கள் உட்பட சில சீடர்கள் மட்டுமே தங்கி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar