வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு நடந்தது.
இக்கோயிலில் பிரதோஷ வழிபாடு மற்றும் பவுர்ணமிக்காக நேற்று முதல் மூன்று நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், வனப்பகுதியில் மழை மற்றும் கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுத்து விருதுநகர் கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து தாணிப்பாறை மற்றும் மகாராஜபுரம் விலக்கு பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். நேற்று காலை டூவீலரில் வந்த வெளியூர் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி வழக்கம்போல் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. தாணிப்பாறை பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.