சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பக்தர்களின்றி பவுர்ணமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2021 10:04
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாளை (ஏப்.27) முதல் சித்ரா பவுர்ணமி விழா 3 நாட்கள் கோயில் வளாகத்திற்குள் நடக்கிறது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் பால்கேணிமேடு சென்று மண்டூக முனிவருக்கு பெருமாள் வரம் அளிப்பார். தொடர்ந்து நகரின் பல்வேறு திருக்கண்களில் 3 நாட்கள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். கொரோனா தொற்று பிரச்னையால் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் விழா நடக்கிறது. தினமும் காலை 7:00 மணி முதல் 9:00 மணிக்குள் திருமஞ்சனம், வேதபாராயணம், சாற்றுமறை நடக்கும். முறையே 3 நாட்களில் குதிரை, கருட, சேஷ வாகனங்களில் பெருமாள் எழுந்தருளுவர். காலை 9:00 மணி மேல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.