கீழக்கரை: கீழக்கரை அருகே வைகை கிராமத்தில் உள்ள சிவகாளி அம்மன் கோயிலில் இரண்டாம் ஆண்டு சித்திரை விழா நடந்தது. கடந்த ஏப். 18 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வைகை வன்னி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து சிவ காளியம்மன் சோனை கருப்பன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. முக கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பனை ஓலைப் பட்டையில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பூஜகர் முருகன் சுவாமி செய்திருந்தார்.