பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2021 05:04
அரியலூர் : ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 10 தேதிக்கு மேல் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வை சூரிய பகவான் வலம் வந்து ஈசனை வழிபடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். அதன்படி இன்று காலை 6:10 மணிக்கு சூரிய உதயமானது. ஒளிக்கதிர்கள் லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்த நிகழ்வு 10 நிமிடம் வரை நீடித்தது. கொரோனோ பரவல் காரணமாக இந்த அரிய காட்சியை காண பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் ஊழியர்களே தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு இன்னும் ஓரிரு நாட்கள் நிகழக்கூடும் என கோவில் குருக்கள் தெரிவித்தார்.