ப.வேலூர்: ப.வேலூர் சக்தி நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதையொட்டி, லட்சுமி ஹயக்ரீவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்தனர்.