மானாமதுரையில் கள்ளழகர் வேடத்தில் எழுந்தருளிய வீர அழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2021 10:04
மானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை விழாவில் வீர அழகர் கள்ளழகர் வேடத்தில் பச்சை பட்டு உடுத்தி கோயிலுக்குள் எழுந்தருளினார்.
கொரோனா பரவலால் அரசு விழாக்களுக்கு தடை விதித்துள்ளதால் கோயிலுக்குள் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 23 ந் தேதி கொடியேற்றத்துடன் பக்தர்களின்றி உள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.எதிர்சேவை நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் வீர அழகர் சுவாமிக்கு அதிகாலையிலேயே திருமஞ்சனம் நடத்தப்பட்டு கள்ளழகர் வேடம் போடப்பட்டு சுவாமி கோயிலுக்குள் வலம் வந்து கோயில் மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று வீரஅழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கள்ளழகர் வேடம் பூண்ட வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அபிேஷக,ஆராதனை நடந்தது. பக்தர்கள் கோயிலுக்கு வெளியே பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு ஆடுகளை பலியிட்டும்,வைகை ஆற்றுக்குள் முடி காணிக்கை செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.