Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்ரா பவுர்ணமியையொட்டி கோவிலில் ... சின்னாளபட்டி சித்ரா பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செயற்கை வைகையில் இறங்கிய அழகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2021
05:04

 மதுரை:மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, வைகையாற்றில் அழகர் இறங்கும் விழா, அழகர்கோவில் ஆடி வீதியில் நடந்தது. பச்சை பட்டு உடுத்தி, நீர் நிரப்பப்பட்ட தாமரை தடாகத்தில் இறங்கிய அழகரை, ஆன்லைனில் கண்டு, பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

மதுரை அழகர் கோவிலில், சித்திரை திருவிழா ஏப்., 23ல் துவங்கியது. தினமும் சுவாமி, கோவில் வளாகத்தில் வலம் வந்தார். நேற்று காலை, சுவாமிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, காலை, 8:30 மணிஅளவில் கோவில் ஆடி வீதியில், செயற்கையாக உருவாக்கப்பட்ட தாமரை பூ, இலைகள் பரப்பப்பட்ட, வைகையாற்றில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி, குதிரை வாகனத்தில் இறங்கினார்.

கொரோனா பரவல் காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், ஆன்லைனில் கண்டு தரிசித்தனர்.ஆற்றில் குவிந்த மக்கள்ஆண்டுதோறும், மதுரை ஏ.வி.பாலம் அருகில் உள்ள ஆழ்வார்புரம் வைகையாற்றில், அழகர் இறங்குவார். கொரோனா காரணமாக கடந்தாண்டும், இந்தாண்டும் இந்நிகழ்ச்சி ரத்தானது.ஆனாலும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், நேற்று ஆழ்வார்புரம் வைகையாற்றுக்கு வந்து மொட்டை அடித்தும், சர்க்கரை சூடன் ஏந்தியும், அழகர்கோவில் திசை நோக்கி வழிபட்டனர்.

அழகர்கோவில் கோட்டை வாசல் பகுதியிலும், பலர் நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று காலை, 10:30 மணிக்கு சேஷ வாகனத்தில், சுவாமி உலா நடக்கிறது. நாளை காலை, 10:00 மணிக்கு மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுப்பதற்காக, கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். ஏப்., 30 காலை, பூப்பல்லக்கு நடக்கிறது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும், கோவில் வளாகத்தில், பக்தர்களின்றி நடத்தப்பட உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar