சேத்துார் : சேத்துார் அருகே தேவதானம் கோவிலுாரில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் சித்ரா பவுர்ணமி, நயினார் நோன்பு கொண்டாடப்பட்டது.ஹிந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில்ஏப். 22ல் தொடங்கிய இதன் நிகழ்ச்சியில் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்தார். நயினார் நோன்பன்று கிருஷ்ணர், பாமா, ருக்மணி தேரில் வலம் வந்தார்.