Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்டாலினுக்காக முத்தாலம்மன் ... இலக்கியக்கழகம் சார்பில் சொற்பொழிவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

03 மே
2021
04:05

கிருஷ்ணகிரி: சென்னானுார் அருகே, 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அடுத்த சென்னானுார் அருகே பாறை குகையிலுள்ள ஓவியங்கள் ஆய்வு செய்யப்பட்டது.


இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: வெண்சாந்து ஓவியங்கள், 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதில் குறியீடுகளும், மனித உருவங்களும் உள்ளன. நடுவிலுள்ள ஓவியத்தொகுதியில் பெண் நேராகவும், அவளுக்கு இருபுறமும் இரண்டு ஆண்கள் தலைகீழாகவும் உள்ளனர். பெண் என்பதை காட்ட இரண்டு புள்ளிகள் மார்புகளாய் காட்டப்பட்டுள்ளன. வலப்பக்கம் சற்று கீழே கைகளை துாக்கி மனித உருவமும், அதன் இடுப்பில் வாளும், அதை இன்னொருவன் தொடுவதுபோலவும் உள்ளது. இதற்கு நேர் இடப்புறம் நடந்து செல்லும் உருவமும், அதற்கு கீழே ஆணும் பெண்ணும் உள்ளன. ஆணின் இடையில் வாளும், கால்களை அகல வைத்து வலது கையை துாக்கி இடது கையால் அருகிலுள்ள பெண்ணை பிடித்திருக்கிறான். இரண்டு நாய் போன்ற விலங்குகளும் உள்ளன. ஒருவன் வலது கையில் வாளை ஓங்கியவாறும், இடது கையால் அருகில் உள்ளவனை பிடித்தபடியும் உள்ளான். ஆங்காங்கே சில மனித உருவங்கள், பாண்டில் விளக்கு, முக்கோணம், சூலம், உடுக்கை போன்ற குறியீடுகளும் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வில், தொல்லியல் ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பிரகாஷ், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar