பழநி: பழநி கோயில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு செலுத்தி வருகின்றனர்.
கோயில் நகரமான பழநியில் பக்தர்கள் தரிசனத்துக்கு கோயில்களில் அனுமதி இல்லை. இந்நிலையில் தினமும் அன்றாட பணிகளில் ஈடுபடுவோர் கோயிலில் வழிபட்ட பிறகே சிலர் துவங்குகின்றனர். மேலும் வாரம் தோறும் செவ்வாய் , வியாழன் சனிக்கிழமைகளில் மற்றும் சஷ்டி, பிரதோஷம், கார்த்திகை போன்ற நாட்களிலும், அதிக அளவில் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இதைத்தவிர பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களிலும் இவர்கள் வழிபடும் வழக்கம். தற்போது அரசு வழிகாட்டு நெறிமுறை படி கோயில்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்காததால் பழநி திருஆவினன்குடி கோயில், பாத விநாயகர் கோயில் ஆகிய இடங்களில் கோயில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ளதால் பக்தர்கள் பலர் கிரிவலம் வரத் துவங்கியுள்ளனர்.