விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வர் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், த யிர், இளநீர்உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, செவ்வரளி மலர்களால் அலங்கரித்து மகா தீப ஆராதனை நடந்தது. பூஜைகளை ரவி குருக்கள் செய்திருந்தார். கோவில் நிர்வாகி குமாரசாமி பூஜை ஏற்பாடுகளை செய்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களின்றி பூஜை நடைபெற்றது.