பதிவு செய்த நாள்
06
மே
2021
10:05
சேலம்: எந்த அரசியல் முடிவு எடுக்கும் முன்பும், புதுச்சேரி, என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி, சேலம், சூரமங்கலத்தில் உள்ள, அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் வழிபடுவது வழக்கம். சமீபத்தில் முடிந்த தேர்தலில், என்.ஆர்.காங்., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், முதல்வராக, நாளை ரங்கசாமி பதவியேற்க உள்ளார்.இதை முன்னிட்டு, கட்சியினர், குடும்பத்தினருடன் நேற்று, சேலம், அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்கு ரங்கசாமி வந்தார். அமைச்சர்களின் பட்டியலை வைத்து, ஒரு மணி நேரம் தரிசனம் செய்தார்.மூலவரின் வாயில் சுருட்டு வைத்து, காதுகளில் பேசி ஆசி பெற்றார். பின், கோவில் வளாகத்தில், 20 நிமிடங்கள் தியானம் செய்ததோடு, பக்தர்களுக்கு லட்டு, ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு வகைகளை வழங்கினார்.