சத்திரப்பட்டி: ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி அடுத்த நரிக்குளம் காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது. இரண்டு நாளாக நடைபெற்ற விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி கரகம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊர் நாட்டாம்மை தங்கவேலு தலைமை வகித்தார்.