பதிவு செய்த நாள்
06
மே
2021
04:05
அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமியான நேற்று, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை, தட்சணகாசி காலபைரவர் கோவிலில், பூஜைகள் செய்த பின் பூட்டப்பட்டதால், தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமியன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்நிலையில், தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு, காலபைரவருக்கு, அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேர யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின், கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு மற்றும் கோவில்களை பூட்டி வைக்க அரசு அறிவித்துள்ளதால், பூஜை முடிந்தவுடன் கோவில் பூட்டப்பட்டது. இதை அறியாத உள்ளூர் பக்தர்கள் நேற்று கோவிலுக்கு வந்தனர். பூட்டியிருந்த கோவிலை பார்த்து ஏமாற்றமடைந்து, கோவில் முன் நின்று வணங்கிச் சென்றனர்.