பதிவு செய்த நாள்
06
மே
2021
04:05
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியதையொட்டி, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தாராபிஷேகம் தொடங்கியது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கி, வரும், 29 வரை உள்ளது. இக்காலத்தில், வெப்பம் கடுமையாக இருக்கும். சிவன் கோவில்களில், உச்சிகால அபிஷேக பூஜை நடக்கும் நேரமான, 11:30 மணிக்கு தொடங்கி, சாயரட்சை பூஜை நடக்கும் நேரமான மாலை, 6:00 மணி வரை தாராபிஷேகம் நடக்கும். இதில், விளாமிச்சை வேர், பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை பொருட்களை, பன்னீரோடு கலந்து, தாரா பாத்திரத்தில் போட்டு, அதை, மூலவர் லிங்கத்தின் மீது, சொட்டு சொட்டாக விழும்படி, தாராபிஷேகம் நடக்கும். அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனை குளிர்விக்கவும், எல்லா ஜீவராசிகளை பாதுகாக்க வேண்டியும், கோடையின் தாக்கம் குறைந்து, போதிய மழை பெய்ய வேண்டியும், தோ?ஷ நிவர்த்திக்காக நடத்தப்படும் தாராபிஷேகம், அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று தொடங்கிது.