பதிவு செய்த நாள்
07
மே
2021
08:05
திருப்பதி:கொரோனா கட்டுப்பாடு மற்றும் பீதி காரணமாக, திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக, பக்தர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம், 5,084 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர். உண்டியல் வருவாய், 35 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. தர்ம தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை காலை, 5:00 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு, 10:00 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மார்க்கம், காலை, 9:00 - மதியம் 2:00 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மார்க்கம், காலை, 9:00 - மாலை, 4:00 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.