பதிவு செய்த நாள்
07
மே
2021
04:05
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், கிருஷ்ண பக்ஷ ஏகாதசி விழா நடந்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். ஒவ்வொரு மாதமும் கோவிலில் ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். தமிழ் பிலவ ஆண்டை முன்னிட்டு, சித்திரை மாதத்தில் வந்த, கிருஷ்ண பக்ஷ ஏகாதசி சிறப்பாக நடந்தது. காலையில் கோவில் நடை திறந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், காலசந்தி பூஜைகள் நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக அரங்கநாத பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு புண்ணிய வசனம், கலச ஆவாஹனம், ஸ்தபன திருமஞ்சனம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் அரங்கநாத பெருமாள் கோவில் வளாகத்தில் வலம் வந்தார். தொடர்ந்து சாற்றுமுறை சேவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.