ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் கடல் பாசிகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
கோடை வெப்பத்தில் நடுக்கடலில் வளரும் கடல் பாசிகள் முதிர்ச்சியால் பெயர்ந்து கரையில் ஒதுங்குவது வழக்கம். அதன்படி கடந்த சில நாள்களாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் டன் கணக்கில் கடல் பாசியில் ஒதுங்கியது. இதனை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் தினசரி அகற்றாமல், ஒருநாள் விட்டு ஒருநாளில் அகற்றுகின்றனர். இதனால் தேங்கி கிடக்கும் கடல் பாசிகளால் துர்நாற்றம் வீசுவதால், பக்தர்கள் அருவருப்புடன் நீராடுகின்றனர். எனவே அக்னி தீர்த்தக் கரையில் தினசரி பாசிகளை அகற்றி சுகாதாரம் பராமரிக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட வேண்டும்.