ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2021 06:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீரங்கத்தில் சித்திரை ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு தேரோட்டத்தின் போது பெருமாள் சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு, கிளி மற்றும் மங்கல பொருட்கள் நேற்று கொண்டு செல்லப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று மாலை 4:30 மணிக்கு. வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் புதிய திருப்பாவை பட்டு அணிந்த ஆண்டாள். ரெங்கமன்னாருடன் எழுந்தருளினார். அப்போது ஆண்டாள். ரங்கமன்னாருக்கு பட்டு சாற்றபட்டும். கிளி மற்றும் மங்கல பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டும் சிறப்பு பூஜைகளை பத்ரிநாராயண பட்டர் செய்தார். பின்னர் ஸ்தானிகம் கிருஷ்ணன் தலைமையில் பட்டு. கிளி மற்றும் மங்கல பொருட்கள் ஒரு கூடையில் வைத்து கோயில் பிரகாரம் சுற்றி வந்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், வேதபிரான் சுதர்சன். மணியம் கோபி, ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர்.