பதிவு செய்த நாள்
08
மே
2021
02:05
கரூர்: கரூர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், சித்திரை மாத இறுதியில், திருவிழா துவங்கி வைகாசி மாதத்தில் பெருவிழா நடப்பது வழக்கம். அதில், கம்பம் நடுதல், பூத்தட்டு, கம்பம் ஆற்றில் விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடக்கும். அன்று மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். தற்போது கொரோனா பரவல் காரணமாக, மே, 9ல் மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவில் வளாகம் வெளியில், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். தங்கள் வீடுகளில் மஞ்சள் நீர் வைத்து கும்பத்தில் வேப்பிலை, இளநீர், மாவிளக்கு தேங்காய் பழவகை வைத்து வழிபாடு செய்து, தயிர்சாதம் படையலுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.