ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் பொதுமக்களுக்கு முககவசம் ,கபசுர குடிநீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2021 12:05
திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வழிபாட்டு தலங்கள் மூலம் பொதுமக்களுக்கு முககவசம் ,கபசுர குடிநீர் , உணவு பொட்டலங்கள் மற்றும் அரசு பொது மருத்துமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்களின் அறிவுறுத்தலின்படியும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக இன்று ஸ்ரீரெங்கா ரெங்கா கோபுர வாயிலில் முக கவசம் சுமார் 100 நபர்களுக்கும் ,கபசுர குடிநீர்ரும் சுமார் 200 நபர் களுக்கும் , வாழை இலையில் கட்டப்பட்ட உணவு பொட்டலங்கள் கோயில் வாயிலில் 440 நபர்களுக்கும் , ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு சுமார் 100 நபர்களுக்கு உணவு பொட்டலங்களும் திருக்கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து முன்னிலையில் வழங்கப்பட்டது , மேலும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு சுமார் 100 உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன , மேலும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் சார்பு கோயில்களான உறையூர் அருள்மிகு ஸ்ரீநாச்சியார் கோயில் , திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள் கோயில் , அன்பில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில் கள் மூலமாக தலா 50 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன .