தேவகோட்டை: அட்சய திருதியை திருநாளை முன்னிட்டு தேவகோட்டை கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அட்சய திருதியை என்பதால் குபேர லட்சுமி அர்ச்சனை செய்து சிறப்பு பூஜை செய்தனர். சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் கோயில்களில் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ரோட்டோரம் உள்ள அம்மன் கோயில்களில் சமூக இடைவெளியுடன் நின்று சுவாமியை கண்டு வணங்கி வழிபட்டு சென்றனர். பட்டு குருக்கள் நகரில் உள்ள அட்சரபாத்திரத்துடன் அருள்பாலித்து கொண்டிருக்கும் அட்சய மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நகை கடைகள் விடுமுறை என்பதால் வீடுகளில் பெண்கள் மஞ்சளில் தங்க காசு அல்லது தங்க பொருட்கள் வைத்து அட்சய திருதியை சிறப்பு பூஜை செய்தனர். சில நகைக்கடைகாரர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வீடு தேடி சென்று புதிய தங்க மற்றும் வெள்ளி பொருட்களை விற்பனை செய்தனர்.