அன்வருக்கு இரண்டு நாளாக காய்ச்சல். மருத்துவர் கொரோனா பரிசோதனைக்கு எழுதி அனுப்பினார். தாய் மர்யம் கவலையானாள். யா அல்லாஹ்! என் பையனைக் காப்பாற்று. முழுசா ஒரு ஆடு குர்பானி கொடுக்கிறேன்! மனசுக்குள் பிரார்த்தித்தாள்.ஊரில் அன்வரின் பாட்டி, அன்வர் குணமானால் ஒரு ஆடு குர்பானி கொடுக்கிறேன் என்று அவளும் வேண்டிக் கொண்டாள். மருத்துவப் பரிசோதனை, நெகடிவ் என்று வந்தது. பூரண குணம் பெற்று, அன்வர் வீடு திரும்பினான். அவனைப் பார்க்க, பக்கத்து வீட்டில் இருந்து சேமக்கண்ணு வந்திருந்தார். அவரிடம் மர்யம், தானும் தன் அம்மாவும் நேர்ச்சை செய்து கொண்டது குறித்து சொல்லி இப்போது இரண்டு ஆடு கொடுக்கவா, இல்லை ஒன்று போதுமா என, தெரியாமல் குழம்புவதாக கூறினாள். சேமக்கண்ணு இரண்டு ஆப்பிள் பார்சலை நீட்டினார். ஒன்று நம்ம ஊர் தலைவர் வர்ற வழியில் தந்து விட்டது; இன்னொன்று நான் வாங்கி வந்தது. இந்த இரண்டு பார்சல்களில் உன்னோட கேள்விகளுக்கு பதில் இருக்குது... என்று சேமக்கண்ணு சொன்னார். என்ன பதில்? மர்யம் கேட்டாள்.ஒரு குழந்தைக்கு ரெண்டு பேரு வாங்கின அன்பளிப்பு ரெண்டா வந்து சேரும் போது, அந்த குழந்தைக்கு ரெண்டு பேரு செய்த நேர்ச்சை ரெண்டாத்தானே நிறைவேத்தணும்? இது தான் மார்க்க அடிப் படையும்?பதிலைக் கேட்ட மர்யம், சேமக்கண்ணா கொக்கா...! என்றாள்.